Welcome to Jettamil

வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படுத்தலும், கண்காட்சியும்

Share

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) தோற்றம் பெற்று ஓராண்டு பூர்த்தி செய்வதை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படுத்தலும்,கண்காட்சியும் இன்று யாழ்ப்பாண நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.

ஓராண்டு பூர்த்தி செய்வதை முன்னிட்டு பிரதான சுடர்கள் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தின் 08 மாவட்டங்கள் தழுவிய சிவில், சமூக செயற்பாட்டாளர்களால் பிரதான சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன.

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் யக்ஸ்சன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா வடமாகாண தலைமை அமைப்பாளர் கண்டுமணி லவகுசா வடக்கு கிழக்கு மாகாணத்தின் 08 மாவட்ட தழுவிய சிவில், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை