இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர்,
“நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம்.
அந்தநாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.
“இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை,” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.