Welcome to Jettamil

மக்கள் புரட்சியை அடுத்து அமைச்சர்கள் பந்துல, ஹரின், மனுஷ பதவி விலகினர்

Share

நேற்று இடம்பெற்ற மக்கள் புரட்சியை அடுத்து, உடனடியாக தமது பதவிகளில் இருந்து விலகுவதாக மூன்று அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகிக் கொள்வதாக அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் நேற்றிரவு அறிவித்துள்ளனர் .

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிக்கையொன்றில் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை, நேற்று மாலை, போக்குவரத்து, வெகுசன ஊடகத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும், பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை