இந்திய கடன் திட்டத்தின் கீழ், யால பருவத்துக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இந்த உரத்தை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.