Monday, Jan 13, 2025

மியன்மார் அகதிகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

By jettamil

மியன்மார் அகதிகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள மியன்மார் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சுட்டிக்காட்டியுள்ளதாவது:

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்த ரோகிங்யா புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது தொடர்பாக தற்போது ஆராய்ந்துவருவதாக அவர் தெரிவித்தார்.

miyanmar

சட்டரீதியான நடைமுறைகளும் கலந்துரையாடல்களும் மேற்கொண்ட பிறகு இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் உள்ள ரோகிங்யா புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர் விபரங்களை ஏற்கனவே மியன்மார் அரசாங்கத்திற்கு கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகையால், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை, அவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு