Welcome to Jettamil

தொடரும் விசாரணை : இஷாராவின் வங்கிக் கணக்கு தொடர்பில் வெளியான தகவல்

Share

தொடரும் விசாரணை : இஷாராவின் வங்கிக் கணக்கு தொடர்பில் வெளியான தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவந்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் யாதெனில், இஷாராவின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பணம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இஷாரா செவ்வந்திக்கு உந்துருளி (மோட்டார் சைக்கிள்) மற்றும் சிற்றூர்ந்து (கார்) போன்ற வாகனங்களைச் செலுத்த முடியும் என்பதை கொழும்பு குற்றப் பிரிவு விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, நேபாளத்தில் கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நிலையில், ஏனைய இருவரும் பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை