சீமெந்துப் பொதியின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
நாட்டில் நேற்றைய தினம் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது .அதனைத்தொடர்ந்து இன்று சீமெந்துப் பொதியின் விலையும் அதிகரித்துள்ளது .
அதன் பிரகாரம் இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலை100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டு,சீமெந்து பொதியொன்றின் புதிய விலையாக 1,375 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது, உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும்.
அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1,475 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.