யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 04 படகுககளில் பயணித்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், தடைசெய்யப்பட்ட வலைகள், மற்றும் 200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மற்றும், 4 படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.
உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.