Welcome to Jettamil

வடபிராந்திய போக்குவரத்துச் சபை பேருந்துகளும் இன்று ஓடாது

Share

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பல் ஈடுபடவுள்ளதாக,  இலங்கை போக்குவத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்ற நடத்திய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இன்று இடம்பெறவுள்ள பணிப் புறக்கணிப்பு  போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள், அரச, அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“வட மாகாணத்திலுள்ள ஏழு சாலைகளிலும் உள்ள ஊழியர்கள், கடமைக்கு செல்வதற்பு பெட்ரோல் கிடையாது.

எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம்.

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கவில்லை.

நாம் கடமை நேரத்தில் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்புவதற்கு கடமை விடுப்பை யாரும் தரப்போவதில்லை.

நாம் பயணிகளை இடைநடுவில் விட்டுவிட்டு பெட்ரோல் நிரப்ப செல்ல முடியாது.

எமது சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமாக இருந்தால் எமது வாகனங்களுக்கு இரவு 6 மணிக்கு பின்னர் எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை