Welcome to Jettamil

குருந்தூர்மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று மக்கள் போராட்டம்

Share

தண்ணி முறிப்பு பகுதியில் 632 ஏக்கர் நிலங்களை தொல்லியல் திணைக்களம் எந்தவித சட்ட பூர்வமான ஏற்பாடுகளும் இன்றி, அபகரித்து தமிழர் தாயகத்தை கூறு போடுகின்ற செயற்பாட்டுக்கு எதிராக, கிராம மக்கள், கிராம பொது அமைப்புக்கள் இன்று  புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற தொடர் போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,

காலம் காலமாக மரபு வழியாக நாங்கள் வாழ்ந்து வந்திருக்கக்கூடிய எங்களுடைய தாயகம், வடக்கு, கிழக்கு இணைந்த எங்களுடைய தாயக்கத்தை கூறு போடுகின்ற முயற்சியாக முல்லைத்தீவு குருந்தூர் மலை, ஆதிசிவன் ஜயனார் ஆலயத்தை முற்றுமாக அகற்றி , நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி  பௌத்த விகாரையை  அமைத்து, தொல்லியல் திணைக்களம் இரவோடிரவாக 632 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துள்ளது.

தொல்லியல் திணைக்களம் என்ற போர்வையிலே தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்வதை, நில அபகரிப்பு செய்யப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நில உரிமை, மத வழிபட்டு சுதந்திரம் என்பன முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

தாயகத்தை கூறு போடுகின்ற, செயற்பாட்டிற்கு எந்த ஒரு ஈழத் தமிழனும் அனுமதிக்க மாட்டான்.

இதனை முற்று முழுதாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

அதற்காக கட்சி பேதமின்றி ,அமைப்புகள் பேதமின்றி ,மத பேதமின்றி அனைவரும் தமிழர்களாக இன்று காலை 9 மணிக்கு அந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அனைத்து உறவுகளையும் பொத்துவில் தொடக்கம் போலி கண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புடன் அழைத்து நிற்கின்றது.

நாங்கள் அனைவரும் தமிழர்களாக அங்கே ஒன்று திரளுவோம். எங்களுடைய நிலத்தை நாங்களே ஆளக்கூடிய உரிமையை வெல்வதற்கு எங்களுடைய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று திரளுவோம் என தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை