ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு நடத்துவோம்! – ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தக் காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், போர்நிறுத்தம் முடிவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது மீண்டும் பாரிய குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் ஒரு போர்ச் சூழலை ஈரான் சந்திக்க வேண்டியிருக்கும்” என அவர் எச்சரித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




