பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
நேற்று பிற்பகல் நடந்த இந்தக் கலந்துரையாடல் குறித்து பிரதமர் ரணில் தமது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“பொரிஸ் ஜோன்சனுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினேன்.
குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் இலங்கை ஏற்றுமதி நாடாக மாறுவதற்கு உதவுவது போன்ற விடயங்களில் எங்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.“ என்று அந்தப் பதிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ரணில், பிரித்தானிய பிரதமரிடம் விளக்கி கூறியுள்ளார்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க இலங்கைக்கு தனது ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுியளித்துள்ளார்.