சாதாரண தரப் பரீட்சைக்கான தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை 07 ஆக குறைப்பு
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை 07 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அவர்களின் விருப்பத்திற்கு அமைய திறமைகளை வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.