கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக 5 மில்லியன் டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
இவற்றை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, முதற்கட்டமாக 5 மில்லியன் டொலர் விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனைத்துக் கொள்கலன்களையும் விடுவிக்க 14 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய தொகை வரும் திங்கட்கிழமைக்குள் மத்திய வங்கியினால் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.