எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர்,
“நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை. இதனால் நெல் உற்பத்தி முழுயாக கிடைக்காது. எனவே ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த நேரத்தில் உலகளாவிய உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம்.
நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் – இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை.
எங்களிடம் டொலர் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போது உறுதியான நிலையில் இல்லை.
மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது” என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.