ரஸ்யா, உலக உணவுத் திட்டத்தின் ஊடாக சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பாடசாலை மட்ட போசாக்கு திட்டங்களுக்காக இந்த நிதித்தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக ரஸ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதி இந்த நிதி, உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.