Welcome to Jettamil

49 மருந்துகள் மற்றும் வெறிநாய் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Share

இலங்கையில் அத்தியாவசியமான 664 மருந்துகளில் 49 மருந்துகள் மற்றும் வெறிநாய் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒப்புக் கொண்டுள்ளார்.

664 அத்தியாவசிய மருந்துகளில், 51 மருந்துகளுக்கு அண்மைய நாட்களில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், தற்போது 49 மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு காணப்படுகிறது.

அந்த பற்றாக்குறையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம். பல மாற்று மருந்துகளும் உள்ளன.

எனவே எந்த ஒரு நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

வெறிநாய்க்கடி தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்தாலும், அவை இப்போது மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன.

உயிர்காக்கும் 14 மருந்துகளில் எதற்கும் தட்டுப்பாடு இல்லை.

தற்போது நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், கட்டுப்படுத்த முடியாத வகையில் மருந்துப் பற்றாக்குறை எதுவும் இல்லை.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை சில சிரமங்கள் ஏற்படக் கூடும்.

ஆனால் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை அல்லது 2024 ஆம் ஆண்டிற்கு அருகில் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை