Welcome to Jettamil

அமெரிக்காவில் இலங்கை பிக்கு பாலியல் வழக்கில் கைது!

Share

அமெரிக்காவில் இலங்கை பிக்கு பாலியல் வழக்கில் கைது!

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையின் போது, பணத்திற்குப் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை பௌத்த பிக்கு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்காவில் வசித்து வரும் 32 வயதான மஹாயயே வினீத என்ற இலங்கை பௌத்த பிக்குவும் அடங்குவதாக பாஸ்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னதாக, பாஸ்டன் நகரில் மனிதக் கடத்தல் மற்றும் விபச்சாரத்தை ஒடுக்குவதற்காக அந்நாட்டு காவல்துறையினரால் “ஒபரேஷன் ரெட் கார்டு” என்ற சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள ரெவெர் ஹோட்டலில் (Revere Hotel) நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வணிக ரீதியான பாலியல் செயல்பாடுகளுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பயன்படுத்தும் கடத்தல் நெட்வொர்க்குகளைக் கண்டறிந்து அழிப்பதே இந்த ஒபரேஷனின் முக்கிய நோக்கமாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான மஹாயயே வினீத பிக்கு உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்கள் மீதும், பணத்திற்காகப் பாலியல் சேவைகளை நாடிய குற்றச்சாட்டின் கீழ் பாஸ்டன் மத்திய பெருநகர நீதிமன்றத்தில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) பௌத்த மத ஆலோசகராகப் பணியாற்றி வந்த இந்த இலங்கை பிக்கு, இச்சம்பவத்தைத் தொடர்ந்து தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் மாதம் இப்பணிக்கு நியமிக்கப்பட்ட இவர், அங்குள்ள பௌத்த தியான சங்கத்திற்கு வழிகாட்டியாக இருந்து தியான நிகழ்ச்சிகளையும், ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் நடத்தி வந்துள்ளார்.

இலங்கையில் பிறந்து தனது 10-வது வயதிலேயே துறவறம் பூண்ட இவர், கடந்த 2022 மே மாதத்தில் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் இறையியல் பள்ளியில் (Harvard Divinity School) முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதும், அதற்கு முன்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் காட்டில் உள்ள ஒரு குகையில் தங்கி தீவிர தியானத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எவரும் இதுவரை நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை என்றும், இதற்கான விரிவான நீதிமன்ற விசாரணை விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை