கண்டி – ஹந்தான கந்தவில் நிறுவப்பட்டுள்ள தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் ஒலிபரப்பு தொழில்நுட்ப கோபுரத்திற்கு தேவையான 13 இலட்சம் ரூபா பெறுமதியான டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசரை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பௌசர் நேற்று காலை கொழும்பில் இருந்து ஹந்தான ஒலிபரப்பு கோபுரத்திற்கு எரிபொருள் இருப்புக்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த நான்கு கொள்ளையர்கள், பௌசரை வழிமறித்து சாரதி மற்றும் உதவியாளரை தாக்கி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளதுடன், கெப் ஒன்றில் பயணித்த தனியார் தொலைபேசி நிறுவன அதிகாரி ஒருவரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கண்டி தலைமையக பொலிஸ் அவசர இலக்கத்தின் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.