சூடானின் மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு தெற்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபுஜா கிராமத்தில் செயல்படாத நிலையில் இருந்த தங்க சுரங்மே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செயல்படாத நிலையில் இருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சூடான் பரந்து விரிந்திருக்கும் ஏராளமான சுரங்கங்களைக் கொண்ட ஒரு பெரிய தங்க உற்பத்தியாளராக உள்ளது.
2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆபிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.