சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது உள்ளூர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல, சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.