துவிச்சக்கர வண்டி பயணத்தில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து இலங்கை வந்த குழுவிற்கு துணைத்தூதுவர் வாழ்த்து
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட 03 பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
ஏற்கனவே இவர்கள் தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். அவ் வகையில் யாழ்ப்பாண இந்தியத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்களை சந்தித்தனர்.
அவர்களின் சைக்கிள் பயணம் இலங்கை தீவு முழுவதும் சிறப்பாக அமைய வேண்டும் என்று யாழ் இந்தியத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அணைத்து உலகநாடுகளுக்கும் சென்று துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ் வகையில் இலங்கைத் தீவு முழுவதும் தற்போது துவிச்சக்கர வண்டி பயணத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.