Welcome to Jettamil

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை விமானத்தில் ஏற்றிச் செல்லும் முதல் கட்ட பணி நிறைவு

Share

இந்திய நன்கொடையாளர்களால் இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிசாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளை விமானத்தில் ஏற்றிச் செல்லும் முதல் கட்டப் பணிகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறைவு செய்துள்ளது.

இலங்கையில் உள்ள சுகாதார பராமரிப்பு வசதிகள் மற்றும் மருத்துவமனைகள், முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில்,

விமான சேவையின் சரக்கு பிரிவு, கேரியரின் சமூக பொறுப்புணர்வு பிரிவான ‘ஸ்ரீலங்கன் கேர்ஸ்’ உடன் இணைந்து, ஜூன் மாதம் முதல் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ தயாரிப்புகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

3,000 கிலோகிராம் வரை எடையுள்ள உயிர்காக்கும் மருந்துகளின் சரக்குக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் மூத்த மேலாளர் தி இந்துவிடம் தெரிவித்தார்.

பெங்களூரு, சென்னை, புது தில்லி மற்றும் மும்பையில் உள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்பட்ட இவை இலங்கை முழுவதும் விநியோகிக்கப்பட்டன.

தமிழ்நாட்டிலிருந்து, மருந்துகள் (பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், ஃபோர்கான் மற்றும் ஃப்ரெசோகன் உட்பட) ஒரு தனிநபராலும் ஈரோடு ரோட்டரி கிளப் மூலமாகவும் இலங்கை தேசிய மருத்துவமனைக்கு உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிக நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை