Welcome to Jettamil

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி 

Share

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும்  பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை