கீழை காற்றினால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா கூறியுள்ளார்.
இதன்படி மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 03/01/2022 வரை தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும்,
மேலும் குறிப்பாக இன்றும், நாளையும் சற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.