இன்று 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில், சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரமும், B முதல் W வரையான வலயங்களுக்கு 10 மணி நேரமும் மின்தடை ஏற்படும்.
மேலதிகமாக, M, N, O, X, Y, Z என பல புதிய வலயங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதற்கமைய, A,B,C,D,E,F வலயங்களில் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம், மின்வெட்டு அமுல் செய்யப்படும்
G,H,I,J,K,L வலயங்களில், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை- 6 மணி நேரமும், பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை- 4 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
P,Q,R,S வலயங்களில், மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரமும்,
T,U,V,W வலயங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, 6 மணி நேரமும் பின்னர், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரமும் மின்சார விநியோகம் தடைப்படும்.
M,N,O,X,Y,Z வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.