உலக வங்கியிடம் இருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக வங்கியிடம் இருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த நிதியை பயன்படுத்து எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆராய்வதாகவும் சபையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.