லெபனான் மீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்! பல்வேறு நகரங்களில் குண்டுமழை
லெபனான் மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்கள் இன்று எவ்விதத் தடையுமின்றித் தொடர்கின்றன.
தெற்கு டயர் (Tyre) மாவட்டத்தில் உள்ள ‘மாரூப்’ (Maaroub) நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேரும், ‘கானா’ (Qana) நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பசூரியா, கலிலா மற்றும் பப்லியா ஆகிய நகரங்களும் இஸ்ரேலிய போர் விமானங்களின் இலக்காக மாறியுள்ளன.
குறிப்பாக, ‘டெபாட்டா’ (Tefahta) நகர் மீது இஸ்ரேல் நடத்திய இரவு நேரத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் ஜசீரா அரபு ஊடகத்தின் தகவல்களின்படி, காஃப்ரா, ஹரிஸ் மற்றும் ரச்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் உக்கிரமான குண்டு வீச்சுகளை முன்னெடுத்து வருகின்றன.
Source : aljazeera





