ஈரானுக்குப் புறப்பட்டார் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர்! – இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை?
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று தற்போது ஈரான் நோக்கிப் பயணிப்பதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட ஒரு முக்கியமான செய்தியை ஈரானியத் தலைமையிடம் கையளிப்பதும், முறிவடைந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதுமே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணிநேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.





