அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் பெரும் திருப்புமுனை!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி விவகாரம் மற்றும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு “பெரிய திருப்புமுனை” ஏற்படும் எனப் பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தற்போது டெஹ்ரானில் முகாமிட்டுள்ளனர்.
அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட புதிய இராஜதந்திர முன்மொழிவுகளை ஈரானியத் தலைமையிடம் ஒப்படைத்துள்ள ஆசிம் முனீர், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.





