இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (28) காலை 9:30 மணியளவில் கொழும்பிலுள்ள இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஒரு முக்கிய விசாரணை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.





