தர்பூசணி காரணமல்ல, மர்மம் வேறு!- மும்பை குடும்பத்தின் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!
மும்பையைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் உயிரிழந்ததற்குக் கடந்த வாரம் உண்ட தர்பூசணி பழமே காரணம் எனப் பரவிய செய்திகள் பொய்க்கத் தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் உணவு நஞ்சாவதால் (Food Poisoning) மரணம் நிகழ்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தடயவியல் அறிக்கையில், குடும்பத் தலைவரான அப்துல்லாவின் உடலில் ‘மோர்ஃபின்’ (Morphine) எனப்படும் வீரியம் மிக்க வலிநிவாரணி மருந்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தர்பூசணியால் ஏற்பட்ட மரணமல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.
உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தமை மருத்துவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரண உணவு நஞ்சாவதால் இத்தகைய மாற்றம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றன.
அன்றிரவு அவர்களுடன் உணவருந்திய மற்ற 5 உறவினர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில், இந்தக் குடும்பத்திற்கு மட்டும் மோர்ஃபின் எப்படிச் சென்றது என்பது மர்மமாகவே உள்ளது.
தர்பூசணி விற்பனை முடங்கியுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




