நாடு முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் அல்லது கைவிடப்பட்ட அரச காணிகள் உள்ளிட்ட 1500 ஏக்கர் காணிகளில், இராணுவம் விவசாயத்தை மேற்கொள்ளவுள்ளது.
உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை மாத தொடக்கத்தில் இந்த அவசர செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில், பிரதி தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய திட்டத்தின் முகாமைத்துவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில், இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான, மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, உள்ளிட்ட அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு திட்டத்தை மேற்பார்வையிட உள்ளார்.