மாற்றுத் திறனாளி குடும்பத்திற்க்கு இராணுவத்தின் ஊடக வீடு ஒன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
துன்னாலை தெற்கு j/370 கிராம சேவகர் பரிவில் விபத்துக்கு உள்ளாகி மாற்றுத் திறனாளியான. ஐந்து பேர் கொண்ட திரு திருமதி சதீஸ்வரன் ராஜேஸ்வரி குடம்பத்தினருக்கு, குறித்த வீடு நான்காவது சிங்க றெஜிமென்ற் படைப்பிரிவின் ஆளணி மற்றும் கட்டுமான உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு குறித்த பயனாளியிடம் கையளிக்கப்பட்து.
4காவது சிங்க றெஜிமென்ற தளபதி லெப்டினன்ட் கேணல் தவுலுகல தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சர்ண போதொட கலந்து கொண்டு வீட்டினை பயனாளியிடம் கையளித்தார்.
இதில் 551 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் யூட் காரிய கரவண மற்றும் இராணுவ தளபதிகள், கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், மத தலைவர்கள், அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.