சிறுமி பா*லியல் வழக்கில் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது
15 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த அனுராதபுர நீதிமன்றம், தேரருக்கு எதிராக உடனடியாகக் கைது உத்தரவு மற்றும் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்திருந்தது.
இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தாயாரே உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதான தாயார் வரும் மே 15-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “கைது தொடர்பான முழு விபரங்களும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





