சந்தையில் கோதுமை மா மாஃபியா தொடர்ந்தும் செயற்படுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளதாகவும் தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலியில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் கமல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.