Sunday, Jan 19, 2025

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா

By jettamil

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் தீவிரமாகும் நிலையில், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச நீதிமன்ற உத்தியை பின்பற்றி நெதன்யாகுவை கைது செய்யத் தயாராக உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் நிலைப்பாடு

கடந்த காலத்தில், பிரித்தானியா சர்வதேச நீதிமன்ற உத்தியை ஏற்றுக்கொண்டு, நெதன்யாகு பிரித்தானியா வந்தால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதற்கென, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விதித்த கைது உத்தியை பின்பற்றி, கனடாவுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என ட்ரூடோ கூறியுள்ளார்.

ட்ரூடோவின் கருத்து

ட்ரூடோ கூறுகையில், “சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கிறோம், நீதிமன்றங்களின் உத்திகளை பின்பற்றுகிறோம். இது கனடியர்களின் அடையாளமாகும்.”

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்

இந்த கைது உத்தவு, 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கைகளால் உருவான மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு விதிக்கப்பட்டதாக ICC தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளின் கருத்துகள்

பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், “சர்வதேச சட்டங்களை பின்பற்றுவது பிரித்தானியாவின் கடமையாகும்” என்றாலும், அவர் நெதன்யாகு கைது குறித்து நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.

இதில், பெல்ஜியம், பிரான்ஸ், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி உட்பட 15 நாடுகள் ICC இன் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் எதிர்ப்பு

ஆனால், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இந்த நடவடிக்கைக்கு எதிரான பார்வையை வெளிப்படுத்தின. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே ஒப்பீடு செய்ய முடியாது, இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிக்கிறோம்” என்றார்.

சிறுபான்மையான நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு