காலிமுகத்திடலில், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து நாடெங்கும் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை மீண்டும் தளர்த்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.
நேற்று 7 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் இன்று 8 மணிநேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.