கண்டெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கால நகைகளை வடக்கு மாகாண அபிவிருத்திக்குப் பயன்படுத்தத் தீர்மானம்! – ஜனாதிபதி!
விடுதலைப் புலிகள் காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டெடுக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
“ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையைக் கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு.”
விடுதலைப் புலிகள் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். இருப்பினும், அது இயலாமல் உள்ளது.
எனவே, அந்த நகைகளைப் பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்தத் தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





