அடுத்தாண்டு முதல், சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உலகில் பல நாடுகளில், கடந்த 2019ம் ஆண்டு முதல் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ள போதும், இந்தியாவில் 4ஜி சேவையே பயன்பாட்டில் உள்ளது.
இந்தநிலையில், சென்னை, குருகிராம், பெங்களூரு, மும்பை, டில்லி, கோல்கட்டா, சண்டிகர், ஜாம்நகர், ஆமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களில் அடுத்தாண்டு முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.