Welcome to Jettamil

எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு!

Share

சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு ரூ.4 ஆல் அதிகரித்து ரூ.365 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் ரூ.3 ஆல் அதிகரித்து ரூ.420 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.10 ஆல் அதிகரித்து ரூ.351 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.62 ஆல் அதிகரித்து ரூ.421 ஆகவும் உள்ளது.

அத்தோடு மண்ணெண்ணெய் விலை 11 ரூபாவினால் அதிகரித்து 242 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் 92 லீற்றருக்கு 4 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை ரூ.365 

பெட்ரோல் 95 ஒக்டேன் 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை ரூ.420

ஓட்டோ டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை ரூ.351

சுப்பர் டீசல் 62 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை ரூ.421

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை ரூபா . 242

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை திருத்தம் நேற்று (1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை