Welcome to Jettamil

லிட்ரோ – லாஃப் நிறுவனங்களின் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

Share

சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ ஆகியன நிறுத்தியுள்ளன.

இரண்டு எரிவாயு நிறுவனங்களிடமும் தற்போது போதிய எரிவாயு இருப்பு இல்லாததன் காரணமாகவே  இவ்வாறு இடைநிறுத்தியுள்ளதாக  இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

தற்போது இலங்கை எதிர்நோக்கும் கடுமையான டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு கடன் வரைவுகளை திறக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

கடைசியாக 30,000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் ஆறு நாட்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்தது . ஆனாலும் 2 நாட்களுக்குள் விநியோகங்கள் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தீவின் இரண்டாவது பெரிய எரிவாயு விநியோகஸ்தரான லாஃப்ஸ், கடந்த ஆறு மாதங்களாக முழுக்  கொள்வனவிற்கு எரிவாயுவை வெளியிடவில்லை.LITRO ஒரு நாளைக்கு சராசரியாக 125,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு வெளியிடுகிறது.

இந்த கடுமையான எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாநகரம் உட்பட தீவிலுள்ள பல உணவகங்கள் இன்னும் இயங்க முடியாத நிலையில் உள்ளதோடு, இதன் காரணமாக பல உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. 

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை