தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று (02) ஒப்பிடுகையில் இன்று (03) மேலும் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 212,000 ரூபா ஆக உள்ளது.
அதேபோல், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 196,000 ரூபா ஆக இருந்ததாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 210,500 ரூபா மற்றும் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 193,900 ரூபா ஆகியிருந்தது.
சர்வதேச சந்தையில், ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,659.64 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.