யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் – திருவெம்பாவைப் பாராயணம்
இன்று (04), யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 5ஆவது வருடமாக திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியைக் கடந்து, தபாற்பெட்டிச் சந்தி வழியாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது.
இந்த பாராயணத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து மன்ற பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி. ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவெம்பாவை விரதம் மற்றும் மார்கழி விழா
ஒவ்வொரு நாளும் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்று, இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா முன்றலில் இருந்து மாணிக்கவாசகர் எழுந்தருளி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், திருநெல்வேலி சந்தி, பரமேஸ்வரா சந்தி ஊடாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தினை வந்தடையும்.
மேலும், திருவெம்பாவை விரத நாளை முன்னிட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மார்கழி விழா இந்த வருடமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.