இஸ்ரேல் மீது லெபனான் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்! வடக்கு இஸ்ரேலில் அலறும் அபாயச் சங்குகள்
லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு இஸ்ரேலின் கலிலி’ (Galilee) பகுதியை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் திடீர் தாக்குதலால் எல்லையோர நகரங்களில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் ‘மெதுல்லா’ (Metula) பகுதியில் அபாயச் சங்குகள் ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





