லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம் கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, இந்த புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் ஓமான் நிறுவன ஒப்பந்தம் நிறைவடைந்தது. இதனையடுத்து, இடம்பெற்ற விலைமனு கோரலின் அடிப்படையில், புதிய நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே நாட்டுக்கு அவசியமான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இப் புதிய நிறுவன ஒப்பந்தந்திற்கு அமைய, ஒரு வருட காலத்திற்காக இலங்கைக்கு 3 இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.