இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டு நெறிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனையின் போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
மேற்படி முடிவுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே, அவர்கள் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
மேலும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோருடன் வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், கொவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவர்.
மேலும் 12 – 18 வயதுக்குட்பட்ட, ஒரு பைஸர் தடுப்பூசி செலுத்தியுள்ள சிறுவர்கள் தமது பெற்றோருடன் வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களது அறிக்கைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும்.
அதன்படி, அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 முதல் 14 நாட்கள் வரை மாறுபடும் என்றும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.