வடகொரியாவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புவியீர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தி வைக்கக் கூடிய இராணுவத்தளத்தை அமெரிக்க நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
சீன எல்லையிலிருந்து அந்தத் தளம் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பியோங்யங் (Pyongyang) அதிகாரிகள் பகிரங்கமாக அறிவிக்காத, சுமார் 20 இரகசிய ஏவுகணைத் தளங்களில் அதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.
அந்தத் தளத்தில் சென்ற மாதம் ஏவுகணைகள் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை என்றும், ஆனால் தளம் செயற்படுகிறது என்றும், சிறிய அளவில் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், நாட்டு மக்களின் நலனில் வடகொரியா கவனம் செலுத்தவேண்டும் என்றும், கிம் ஜோங் உன்னின் (Kim Jong Un) ஆட்சி அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.