Welcome to Jettamil

பலாலி விமான நிலைய செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் உத்தரவு

jaffna airport

Share

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு, பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த வருடத்தில் 8 இலட்சம் சுற்றுலாத்துறையினரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு எதிர்பார்ப்பதுடன்,  அதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கை து 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டங்களை வகுக்குமாறும் பிரதமர் இதன் போது ஆலோசனை வழங்கினார்.

அதற்கான கூட்டங்கள், மேம்பாடுகள், மாநாடுகள் மற்றும் காட்சிப்படுத்தல்களை முன்னெடுக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை