Welcome to Jettamil

பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை

Share

யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர், பேருந்து நடத்தினரைத் தாக்கி, விழுத்தி விட்டு அவரிடம் இருந்த பணத்தை  கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்,  59 ஆயிரத்து 177 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மூவர், உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம் விட்டுக் கொடுக்க முற்பட்டபோது அவரைத் தள்ளி விழுத்தி அவரிடமிருந்த பணத்தினைப் பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

அவர்கள் இறங்கிய இடத்தில் வேறு சிலரும் காத்திருந்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை